search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    பாஜகவின் முறைகேடுகள் பற்றி பாராளுமன்றத்தில் உரக்க வலியுறுத்த வேண்டும் -சோனியா காந்தி

    பாஜகவின் முறைகேடுகள் பற்றி பாராளுமன்றத்தில் உரக்க வலியுறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பிக்களுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:-

    பாஜக அரசில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் உரக்க வலியுறுத்தவேண்டும். 

    நாட்டில் லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள், பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் பாஜக மேற்கொண்ட செயல்பாடுகள் வெட்கக்கேடானது. 

    ஜம்மு-காஷ்மீரில் தேசிய தலைவர்களை அனுமதிக்காத பாஜக, ஐரோப்பிய தலைவர்களை அனுமதிக்கிறது. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×