search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த ராக்கெட்
    X
    கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த ராக்கெட்

    கார்டோசாட்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

    இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
    ஸ்ரீஹரிகோட்டா:

    பூமியை கண்காணித்து துல்லியமான தகவல்களை அளிப்பதற்காகவும், இந்திய எல்லைகளை கண்காணித்து தகவல் அளிக்கவும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), கார்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்கள் இன்று பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

    திட்டமிடப்பட்ட பாதையில் துல்லியமாக பயணித்த பிஎஸ்எல்வி சி47 ராக்கெட், பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததும், கார்டோசாட்-3 செயற்கைக்கோள் தனியாக பிரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 509 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் கார்டோசாட்-3 நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் நானோ செயற்கைக் கோள்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டன.

    இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பின்னர் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார்.
    Next Story
    ×