search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத் பவார் வீட்டில் அஜித் பவார்
    X
    சரத் பவார் வீட்டில் அஜித் பவார்

    மகாராஷ்டிரா - சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு

    மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்திக்க அவரது வீட்டுக்கு அஜித் பவார் இன்று இரவு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. அடுத்த சில மணி நேரங்களில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும், துணை முதல் மந்திரி அஜித் பவாரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    இதையடுத்து, மகாராஷ்டிரா சட்டசபை இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, நாளை காலை 8 மணிக்கு மகாராஷ்டிரா சட்டசபை கூடுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின.

    இந்நிலையில், மும்பையில் உள்ள சில்வர் ஓக் பகுதியில் அமைந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வீட்டுக்கு அஜித் பவார் இன்று இரவு சென்றார். அங்கு அவர் சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலேவை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×