என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது எப்படி? மும்பையில் இன்று இரவு பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை
Byமாலை மலர்26 Nov 2019 9:08 AM GMT (Updated: 26 Nov 2019 9:08 AM GMT)
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறித்து மும்பையில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மும்பை:
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பாஜக ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாஜக அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
எனவே, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்படும் நிலை உள்ளது. அதற்கு முன்னதாக, பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மும்பையில் இன்று இரவு 9 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
பாஜகவின் உயர்மட்டக்குழு இன்று கூடியது. அப்போது, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இரவு 9 மணிக்கு கர்வார் கிளப் ஓட்டலுக்கு வந்து ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது என கட்சியின் மூத்த தலைவர் ராவ்சாகிப் தான்வே பாட்டீல் கூறினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பாஜக ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாஜக அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி, எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். நேற்று இரவு நட்சத்திர ஓட்டலில் அந்த எம்எல்ஏக்களின் அணிவகுப்பையும் நடத்தி தங்கள் பலத்தை காண்பித்தனர்.
எனவே, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்படும் நிலை உள்ளது. அதற்கு முன்னதாக, பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மும்பையில் இன்று இரவு 9 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
பாஜகவின் உயர்மட்டக்குழு இன்று கூடியது. அப்போது, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இரவு 9 மணிக்கு கர்வார் கிளப் ஓட்டலுக்கு வந்து ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது என கட்சியின் மூத்த தலைவர் ராவ்சாகிப் தான்வே பாட்டீல் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X