என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாயை துரத்தும்போது வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட சிறுத்தை
Byமாலை மலர்26 Nov 2019 6:54 AM GMT (Updated: 26 Nov 2019 6:54 AM GMT)
மகாராஷ்டிராவில் நாயை துரத்திக்கொண்டு வந்த சிறுத்தை குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஒரு வீட்டிற்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டம் பிம்பல்கன் ரோடா கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப். கடந்த சனிக்கிழமை இரவு இவரது வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, அலறியடித்து வெளியே ஓடினர்.
திலீப்பின் வளர்ப்பு நாயை துரத்திக் கொண்டு வந்த சிறுத்தை அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளது. நாய் பின்பக்க கதவு வழியாக வெளியே ஓடிவிட்டது. ஆனால் சிறுத்தை வெளியேற தெரியாமல் உள்ளேயே படுத்துக்கொண்டது. இதையடுத்து திலீப் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 4 வயதான அந்த சிறுத்தை பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு விடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X