search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஎஸ்எல்வி சி47
    X
    பிஎஸ்எல்வி சி47

    பிஎஸ்எல்வி சி47 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது

    பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் இன்று தொடங்கியது.
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தயாரித்த கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது.

    இஸ்ரோ

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்சவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 27-ந்தேதி ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது. அதன்படி பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் நாளை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் இன்று தொடங்கியது. கவுண்டவுன் முடிந்து, நாளை காலை சரியாக 9.28 மணிக்கு, செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் விண்ணில் பாய்கிறது

    பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் எக்ஸ்.எல். வகையில் 21-வது ராக்கெட் ஆகும். சதீஷ்சவான் விண்வெளி மையத்தில் ஏவப்படும் 75-வது ராக்கெட் என்ற பெருமையை பெறுகிறது.

    509 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்ட பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ள கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது.

    மேலும் எதிரிகளின் ராணுவ நிலைகளையும், பதுங்கு குழிகளையும், தீவிரவாதிகளின் மறைவிடங்களையும் மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது.

    Next Story
    ×