என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் அரசு பேருந்து மீது லாரி மோதல்- 9 பேர் பலி
Byமாலை மலர்25 Nov 2019 11:01 AM GMT (Updated: 25 Nov 2019 11:01 AM GMT)
உத்தர பிரதேசத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.
பண்டா:
உத்தர பிரதேச மாநிலம் திண்ட்வாரி காவல் சரகத்திற்குட்பட்ட சாய்மிரி வளைவு அருகே, இன்று மதியம் பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. பேருந்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மாவட்ட எஸ்பி கணேஷ் பிரசாத் கூறுகையில், பண்டாவில் இருந்து பதேபூர் நோக்கி சென்ற பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணம் செய்தனர். சாய்மிரி வளைவு அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X