என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி கைலாஷ் சந்திரா ஜோஷி மரணம்
Byமாலை மலர்24 Nov 2019 8:24 AM GMT (Updated: 24 Nov 2019 8:24 AM GMT)
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான கைலாஷ் சந்திரா ஜோஷி(90) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
போபால்:
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக ஜனதா கட்சி சார்பில் 1977-1978 ஆண்டுக்கு இடையில் 6 மாதங்கள் பதவி வகித்தவர் கைலாஷ் சந்திரா ஜோஷி. பாஜகவை சேர்ந்த இவர் 1962 முதல் 1998 வரை பாக்லி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநில மக்களால் ‘அரசியல் முனிவர்’ என்று அழைக்கப்பட்ட கைலாஷ் சந்திரா ஜோஷி உடல்நலக்குறைவால் போபால் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை கைலாஷ் சந்திரா ஜோஷி(90) உயிரிழந்ததாகவும் இறுதிச்சடங்குகள் டேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஹட்பிப்பல்யா நகரில் நடைபெறும் எனவும் அவரது மகன் தீபக் ஜோஷி தெரிவித்துள்ளார்.
கைலாஷ் சந்திரா ஜோஷியின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான கைலாஷ் சந்திரா ஜோஷியின் மறைவு செய்தியை அறிந்து வேதனை அடைந்துள்ளேன்.
ஜனசங்கம் மற்றும் பாஜகவை மத்திய இந்தியாவில் வளர்ப்பதற்கு அவர் அரும்பணி ஆற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என மோடி குறிப்பிட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக ஜனதா கட்சி சார்பில் 1977-1978 ஆண்டுக்கு இடையில் 6 மாதங்கள் பதவி வகித்தவர் கைலாஷ் சந்திரா ஜோஷி. பாஜகவை சேர்ந்த இவர் 1962 முதல் 1998 வரை பாக்லி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.
பின்னர், 2000 முதல் 2004 வரை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் 2004 முதல் 2014 வரை போபால் தொகுதிக்கான மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநில மக்களால் ‘அரசியல் முனிவர்’ என்று அழைக்கப்பட்ட கைலாஷ் சந்திரா ஜோஷி உடல்நலக்குறைவால் போபால் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை கைலாஷ் சந்திரா ஜோஷி(90) உயிரிழந்ததாகவும் இறுதிச்சடங்குகள் டேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஹட்பிப்பல்யா நகரில் நடைபெறும் எனவும் அவரது மகன் தீபக் ஜோஷி தெரிவித்துள்ளார்.
கைலாஷ் சந்திரா ஜோஷியின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவரான கைலாஷ் சந்திரா ஜோஷியின் மறைவு செய்தியை அறிந்து வேதனை அடைந்துள்ளேன்.
ஜனசங்கம் மற்றும் பாஜகவை மத்திய இந்தியாவில் வளர்ப்பதற்கு அவர் அரும்பணி ஆற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என மோடி குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X