search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா கொடி, சின்னம்
    X
    சிவசேனா கொடி, சின்னம்

    தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா வழக்கு

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றதற்கு எதிராக சிவசேனா கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாத பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியானது மகாராஷ்டிரா மாநிலத்தின் மீதும் இங்குள்ள மக்களின் மீதும் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

    உத்தவ் தாக்கரே

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரி அஜித் பவார் ஆகியோருக்கு எதிராக சிவசேனா கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    Next Story
    ×