என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் பிரதமர்கள் குடும்பத்துக்கு இனிமேல் சிறப்பு பாதுகாப்பு கிடையாது
Byமாலை மலர்23 Nov 2019 3:12 AM GMT (Updated: 23 Nov 2019 3:12 AM GMT)
சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டப்படி, முன்னாள் பிரதமர்கள் குடும்பத்துக்கு இனிமேல் சிறப்பு பாதுகாப்பை விலக்குவதற்காக, அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி :
சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டப்படி, பிரதமர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாதுகாப்பை விலக்குவதற்காக, அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபை கடந்த 20-ந் தேதி ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, இந்த திருத்தம் அடங்கிய மசோதா, அடுத்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
சமீபத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டப்படி, பிரதமர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாதுகாப்பை விலக்குவதற்காக, அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபை கடந்த 20-ந் தேதி ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, இந்த திருத்தம் அடங்கிய மசோதா, அடுத்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
சமீபத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X