search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஜார்கண்டில் துணிகரம் - நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் உயிரிழப்பு

    ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் உயிரிழந்தனர்.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்கள் காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். 

    இந்த நக்சல், மாவோயிஸ்ட் குழுக்களை ஒழிக்க மாநிலங்களில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு. இதனால் போலீசாருக்கும் இந்த குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் லேட்ஹெர் மாவட்டத்திற்கு உள்பட்ட சன்ட்வா பகுதியை சேர்ந்த போலீசார் சிலர் இன்று வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர். 

    அப்போது போலீசார் வந்த வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 போலீசார் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தனர்.  

    இதையடுத்து, தாக்குதல் நடைபெற்ற பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×