என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாம்: ஐ.ஐ.டி. விடுதியில் ஜப்பான் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்22 Nov 2019 8:49 AM GMT (Updated: 22 Nov 2019 2:45 PM GMT)
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. விடுதியில் ஜப்பான் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி:
இந்தியாவில் உள்ள சில கல்லூரி மற்றும் ஐ.ஐ.டி.களில் வெளி மாநிலங்களில் இருந்து படிப்பதற்காக வந்து விடுதிகளில் தங்கும் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஜப்பானில் உள்ள ஜிஃபு பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோட்டா ஓனோடா(22) என்ற அந்த மாணவர் ‘இன்ட்டெரிம்’ எனப்படும் பணி அனுபவ பயிற்சிக்காக கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் சேர்ந்திருந்தார். அவரது பயிற்சிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் விடுதியின் குளியலறையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
ஐ.ஐ.டி. நிர்வாகம் அளித்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சில கல்லூரி மற்றும் ஐ.ஐ.டி.களில் வெளி மாநிலங்களில் இருந்து படிப்பதற்காக வந்து விடுதிகளில் தங்கும் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் தற்போது அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. விடுதியில் ஜப்பான் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் உள்ள ஜிஃபு பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோட்டா ஓனோடா(22) என்ற அந்த மாணவர் ‘இன்ட்டெரிம்’ எனப்படும் பணி அனுபவ பயிற்சிக்காக கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் சேர்ந்திருந்தார். அவரது பயிற்சிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் விடுதியின் குளியலறையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
ஐ.ஐ.டி. நிர்வாகம் அளித்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X