என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கர்: ஏரிக்குள் கார் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி
Byமாலை மலர்21 Nov 2019 5:32 PM GMT (Updated: 21 Nov 2019 5:32 PM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தில் கார் ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் பிமிட்ரா மாவட்டத்தில் உள்ள சாலையில் இன்று இரவு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 3 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை உள்பட 8 பேர் பயணித்துக்கொண்டிருந்தனர்.
மோகப்ஹடா பகுதியை கடந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் அருகே இருந்த ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஏரிக்குள் மூழ்கிய காரில் சிக்கியிருந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மீட்கப்பட்டவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 8 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X