search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரு க்ட்சி தலைவர்களின் சந்திப்பு
    X
    இரு க்ட்சி தலைவர்களின் சந்திப்பு

    தேசியவாத காங்கிரசுடன் உடன்பாடு எட்டியது: சிவசேனாவுடன் நாளை பேச்சுவார்த்தை - காங்கிரஸ்

    தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு எட்டியது, சிவசேனாவுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க., சிவசேனா கட்சிகள் இடையே முதல்-மந்திரி பதவி விஷயத்தில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் கடந்த 12-ம் தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இதற்கிடையே, எதிர் அணியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. சிவசேனாவுடன் கைகோர்ப்பது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பேசி வந்தாலும் இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

    தேர்தல் முடிவுகள் வெளியாகி 25 நாட்களை கடந்த போதிலும் அங்கு இன்னமும் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் கூட்டுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது. மேலும், சிவசேனா கட்சியுடனான பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×