என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரவு நேர பணிகளில் பெண்களை ஈடுபடுத்த கர்நாடக அரசு ஆணை பிறப்பிப்பு
Byமாலை மலர்21 Nov 2019 5:26 AM GMT (Updated: 21 Nov 2019 5:26 AM GMT)
தொழிற்சாலைகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பெண்களை இரவு பணியில் ஈடுபடுத்த கர்நாடக அரசு ஆணை பிறப்பித்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், மற்ற தொழிற்சாலைகளில் அவர்களை இரவு நேர பணிகளில் பயன்படுத்துவது கிடையாது.
தற்போது தொழிற்சாலைகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பெண்களை இரவு 7 மணிமுதல் காலை 6 மணி வரை பணியில் ஈடுபடுத்த கர்நாடக அரசு நேற்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தொழிற்சாலை சட்ட 1948-ன் கீழ் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக கர்நாடக மாநில அரசு உத்தரவில் கூறியுள்ளது.
இதன்படி தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவுபெற்ற தொழிற்சாலைகளில் பெண் ஊழியர்கள் இரவு 7 மணிமுதல் காலை 6 மணி வரை பணியாற்றலாம். இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், மற்ற தொழிற்சாலைகளில் அவர்களை இரவு நேர பணிகளில் பயன்படுத்துவது கிடையாது.
தற்போது தொழிற்சாலைகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பெண்களை இரவு 7 மணிமுதல் காலை 6 மணி வரை பணியில் ஈடுபடுத்த கர்நாடக அரசு நேற்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தொழிற்சாலை சட்ட 1948-ன் கீழ் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக கர்நாடக மாநில அரசு உத்தரவில் கூறியுள்ளது.
இதன்படி தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவுபெற்ற தொழிற்சாலைகளில் பெண் ஊழியர்கள் இரவு 7 மணிமுதல் காலை 6 மணி வரை பணியாற்றலாம். இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X