என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பங்குச்சந்தைகள் உயர்வு- புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்
Byமாலை மலர்20 Nov 2019 8:34 AM GMT (Updated: 20 Nov 2019 8:34 AM GMT)
மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 40 ஆயிரத்து 816 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை எட்டியது.
மும்பை:
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டியதால் முன்னணி நிறுவன பங்குகளின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்தன.
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகத்தின் இடையே குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று காலையில் 321 புள்ளிகள் அதிகரித்து, 40 ஆயிரத்து 816 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முன்பு, சென்செக்ஸ் 40 ஆயிரத்து 789 புள்ளிகள் வரை உயர்ந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி இன்று 87 புள்ளிகள் உயர்ந்து 12,027 புள்ளிகளை தொட்டது.
வரிச்சலுகை அறிவிப்பு, வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் நிறுவனங்களின் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது பங்குச்சந்தையில் சாதகமான நிலைக்கு வழிவகுத்துள்ளது.
மதிய நிலவரப்படி சென்செக்ஸ் 40 ஆயிரத்து 704 புள்ளிகளாகவும், நிப்டி 12 ஆயிரத்து 12 புள்ளிகளாகவும் இருந்தது. ரிலையன்ஸ், சன் பார்மா, இந்தஸ்இந்த் வங்கி, பிபிசிஎல், ஜீ என்டர்டெயின் உள்ளிட்ட 1187 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. 1054 நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. 163 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X