என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’
Byமாலை மலர்20 Nov 2019 12:06 AM GMT (Updated: 20 Nov 2019 12:06 AM GMT)
புகழ்பெற்ற இயற்கைவியலாளர் டேவிட் ஆட்டன்பரோ ‘இந்திரா காந்தி அமைதி விருது’க்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் இந்திரா காந்தி பெயரில் அமைதிக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, புகழ்பெற்ற இயற்கைவியலாளர் டேவிட் ஆட்டன்பரோ இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான சர்வதேச நடுவர் குழு அவரது பெயரை தேர்வு செய்தது.
இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், “டேவிட் ஆட்டன்பரோ, தம் வாழ்நாளில், இவ்வுலகின் இயற்கை விந்தைகளை அதிக அளவில் வெளிப்படுத்தியவர். ஆகையால்தான் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையின் செயலாளர் சுமன் துபே இந்த விருதுபற்றி கூறுகையில், “மக்களிடம் மனிதநேய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அயராமல் உழைத்தவர்; பல்லுயிர்களை பராமரித்து பாதுகாக்க பாடுபட்டவர்; அனைவரும் வாழ்நாள் முழுவதும் நிலையான நல்லிணக்கமான வாழ்க்கை வாழ, தன்னை அர்ப்பணித்து கொண்டவர், டேவிட் ஆட்டன்பரோ” என்று தெரிவித்தார்.
டெல்லியில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் இந்திரா காந்தி பெயரில் அமைதிக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, புகழ்பெற்ற இயற்கைவியலாளர் டேவிட் ஆட்டன்பரோ இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான சர்வதேச நடுவர் குழு அவரது பெயரை தேர்வு செய்தது.
இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், “டேவிட் ஆட்டன்பரோ, தம் வாழ்நாளில், இவ்வுலகின் இயற்கை விந்தைகளை அதிக அளவில் வெளிப்படுத்தியவர். ஆகையால்தான் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையின் செயலாளர் சுமன் துபே இந்த விருதுபற்றி கூறுகையில், “மக்களிடம் மனிதநேய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அயராமல் உழைத்தவர்; பல்லுயிர்களை பராமரித்து பாதுகாக்க பாடுபட்டவர்; அனைவரும் வாழ்நாள் முழுவதும் நிலையான நல்லிணக்கமான வாழ்க்கை வாழ, தன்னை அர்ப்பணித்து கொண்டவர், டேவிட் ஆட்டன்பரோ” என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X