என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொருளாதார மந்தநிலை - மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
Byமாலை மலர்19 Nov 2019 1:01 PM GMT (Updated: 19 Nov 2019 1:01 PM GMT)
நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையை கண்டித்து வரும் 30-ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் ஒத்திவைத்துள்ளது .
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்களுடனான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.
அதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலைக்கு காரணமான மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து வரும் 30-ம் தேதி டெல்லி ராம்லீலா திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறு என காங்கிரஸ் தலைமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பொருளாதார மந்தநிலையை கண்டித்து நவம்பர் 30-ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் ஒத்திவைத்துள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான கே.சி.வேணுகோபால் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,
மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 30-ம் தேதி டெல்லியில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X