என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐக்கிய அரபு அமீரக தலைவரின் சகோதரர் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்
Byமாலை மலர்19 Nov 2019 9:52 AM GMT (Updated: 19 Nov 2019 9:52 AM GMT)
ஐக்கிய அரபு அமீரக தலைவரின் சகோதரர் ஷேக் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யானின் இறப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஐக்கிய அரபு அமீரக தலைவரும் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத்தின் சகோதரர், ஷேக் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் நேற்று காலமானார். அவருக்கு வயது 63. அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
ஆட்சியாளரின் சகோதரர் மறைவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவதுடன், 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘ஷேக் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த தருணத்தில் பிரிவால் வாடும் அவர்களது குடும்பத்திற்காகவும் அமீரக மக்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X