என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்களவையில் இருந்து காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு
Byமாலை மலர்19 Nov 2019 7:27 AM GMT (Updated: 19 Nov 2019 7:27 AM GMT)
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) உயரிய பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
இதுதொடர்பாக விவாதிக்கும்படி மக்களவையில் இன்று காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதிக்கவில்லை. இதனால் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக மக்களவையில் இதுபற்றிய பேசிய திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் எம்பிக்களும் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X