என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தூர் அருகே மாமியார் கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்18 Nov 2019 12:12 PM GMT (Updated: 18 Nov 2019 2:00 PM GMT)
சித்தூர் அருகே மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
சித்தூர் மாவட்டம் சுக்கவாரி பல்லியை சேர்ந்தவர் ராஜபேலா. அவரது மகன் ஷான்பாஷா (வயது 25). இவர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறர்.
ஷான்பாஷாவுக்கு ரோபிசெர்லாவை சேர்ந்த சீனா (22)க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
சீனா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். சீனாவை மாமியார் ராஜபேலா கொடுமைபடுத்தி வந்தார். இதுகுறித்து கணவன் ஷான்பாஷாவிடம் மனைவி பலமுறை கூறி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாமியார் என்னை தொடர்ந்து கொடுமைபடுத்தி வருவதாகவும், தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும் கணவருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது சீனா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா, தாசில்தார் சீனிவாசலு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பீலேரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மாமியாரைதேடி வருகின்றனர்.
சித்தூர் மாவட்டம் சுக்கவாரி பல்லியை சேர்ந்தவர் ராஜபேலா. அவரது மகன் ஷான்பாஷா (வயது 25). இவர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறர்.
ஷான்பாஷாவுக்கு ரோபிசெர்லாவை சேர்ந்த சீனா (22)க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
சீனா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். சீனாவை மாமியார் ராஜபேலா கொடுமைபடுத்தி வந்தார். இதுகுறித்து கணவன் ஷான்பாஷாவிடம் மனைவி பலமுறை கூறி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாமியார் என்னை தொடர்ந்து கொடுமைபடுத்தி வருவதாகவும், தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும் கணவருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது சீனா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா, தாசில்தார் சீனிவாசலு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பீலேரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மாமியாரைதேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X