என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரைவர் பஸ்சை ஓட்டியபோது பெண்கள் கியர் மாற்றியதால் பரபரப்பு - அதிகாரிகள் நடவடிக்கை
Byமாலை மலர்18 Nov 2019 3:10 AM GMT (Updated: 18 Nov 2019 3:10 AM GMT)
கேரள மாநிலத்தில் டிரைவர் பஸ்சை ஓட்டியபோது பெண்கள் கியரை மாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து டிரைவர் லைசென்சை பறிமுதல் செய்தனர்.
பாலக்காடு:
வயநாடு மாவட்டம் கல்பெட்டா நகரை சேர்ந்தவர் ஷாஜி (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பஸ்சில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவர் வழக்கம் போல் பஸ்சை ஓட்டிச்சென்றார். அப்போது இவருடைய இருக்கைக்கு அருகில் 2 இளம்பெண்கள் அமர்ந்து பயணம் செய்து வந்தனர். அப்போது டிரைவர் பஸ்சை ஓட்டிய போது இந்த இளம்பெண்கள் கியரை மாற்றியுள்ளனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையொட்டி பஸ்சில் பயணம் செய்தவர்கள் இதை தங்களது செல்போன்களில்படம் பிடித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து பஸ்சை மறித்தனர்.
பின்னர் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் இளம்பெண்களை கியரை மாற்ற அனுமதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவருடைய லைசென்சை உடனடியாக பறிமுதல் 7 மாதங்கள் பஸ்சை ஓட்ட தடை விதித்தனர்.
வயநாடு மாவட்டம் கல்பெட்டா நகரை சேர்ந்தவர் ஷாஜி (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பஸ்சில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவர் வழக்கம் போல் பஸ்சை ஓட்டிச்சென்றார். அப்போது இவருடைய இருக்கைக்கு அருகில் 2 இளம்பெண்கள் அமர்ந்து பயணம் செய்து வந்தனர். அப்போது டிரைவர் பஸ்சை ஓட்டிய போது இந்த இளம்பெண்கள் கியரை மாற்றியுள்ளனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையொட்டி பஸ்சில் பயணம் செய்தவர்கள் இதை தங்களது செல்போன்களில்படம் பிடித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து பஸ்சை மறித்தனர்.
பின்னர் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் இளம்பெண்களை கியரை மாற்ற அனுமதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவருடைய லைசென்சை உடனடியாக பறிமுதல் 7 மாதங்கள் பஸ்சை ஓட்ட தடை விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X