என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இத்தாலியின் மணல் ஓவியப் போட்டியில் இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக்குக்கு விருது
Byமாலை மலர்16 Nov 2019 11:57 AM GMT (Updated: 16 Nov 2019 11:57 AM GMT)
இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச மணல் ஓவியப் போட்டியில் மகாத்மா காந்தியின் சிற்பத்தை உருவாக்கிய இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக் விருதை வென்றார்.
ரோம்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.
இந்நிலையில், இத்தாலி நாட்டின் லெஸ்ஸி நகரில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பப் போட்டியில் சுதர்சன் பட்நாயக் பங்கேற்றார். 8 நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ரஷியக் கலைஞர் பவேல் மினில்கோவ் என்பவருடன் இணைந்து 8 அடி உயரத்தில்
மகாத்மா காந்தி சிலையை மணலில் உருவாக்கி பார்வையாளர்களையும் நடுவர்களையும் கவர்ந்தார்.
இந்த சிலைக்காக இத்தாலி நாட்டின் ‘தங்க மணற்கலை’ விருதுக்கு சுதர்சன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். ரோம் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.
இதுதவிர பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வரும் மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் முதல் பரிசாக தங்கப் பதக்கம் மற்றும் பல்வேறு விருதுகளை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், இத்தாலி நாட்டின் லெஸ்ஸி நகரில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பப் போட்டியில் சுதர்சன் பட்நாயக் பங்கேற்றார். 8 நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ரஷியக் கலைஞர் பவேல் மினில்கோவ் என்பவருடன் இணைந்து 8 அடி உயரத்தில்
மகாத்மா காந்தி சிலையை மணலில் உருவாக்கி பார்வையாளர்களையும் நடுவர்களையும் கவர்ந்தார்.
இந்த சிலைக்காக இத்தாலி நாட்டின் ‘தங்க மணற்கலை’ விருதுக்கு சுதர்சன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். ரோம் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X