என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலைகள்- 4 பேர் கைது
Byமாலை மலர்16 Nov 2019 11:31 AM GMT (Updated: 16 Nov 2019 11:31 AM GMT)
பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த துப்பாக்கி தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து, அவற்றின் உரிமையாளர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர்.
முங்கர்:
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் முபாசில் அருகே கங்கை நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிக்கும் சிறிய ஆலைகள் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று அப்பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது, சட்டவிரோதமாக 7 துப்பாக்கி தொழிற்சாலைகள் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த துப்பாக்கி தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த ஆலைகளில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரங்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 4 பேரும் முங்கர் மற்றும் அருகில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மீது ஆயுத தடைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X