search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்

    பீகாரில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலைகள்- 4 பேர் கைது

    பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த துப்பாக்கி தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து, அவற்றின் உரிமையாளர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர்.
    முங்கர்:

    பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் முபாசில் அருகே கங்கை நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிக்கும் சிறிய ஆலைகள் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து இன்று அப்பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது, சட்டவிரோதமாக 7 துப்பாக்கி தொழிற்சாலைகள் செயல்பட்டது தெரியவந்தது. 

    இதையடுத்து அந்த துப்பாக்கி தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த ஆலைகளில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரங்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 4 பேரும் முங்கர் மற்றும் அருகில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மீது ஆயுத தடைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×