என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிக்ஸ் மாநாட்டை முடித்துவிட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி
Byமாலை மலர்15 Nov 2019 5:10 PM GMT (Updated: 15 Nov 2019 5:10 PM GMT)
பிரேசில் நாட்டில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.
புதுடெல்லி:
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரிக்ஸ் அமைப்பின் 11-வது மாநாடு பிரேசில் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரேசில் அதிபர் போல்சோனரோ மற்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பிரேசிலில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டை முடித்துவிட்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். தனி விமானம் மூலம் டெல்லி வந்திறங்கிய மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X