என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூகுள் டூடுல் போட்டியில் வெற்றிபெற்ற 7 வயது சிறுமி
Byமாலை மலர்15 Nov 2019 2:56 PM GMT (Updated: 15 Nov 2019 2:56 PM GMT)
தேசிய அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் போட்டியில் 7 வயது சிறுமி வரைந்த படங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சண்டிகர்:
இந்தியாவில் படிக்கும் பள்ளி மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம், வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்துகிறது.
படைப்பாற்றலும், வரைதலில் ஈடுபாடும் கொண்டுள்ள இந்திய மாணவர்களுக்காக கூகுள் நடத்தும் போட்டி தான் ‘டூடுல் 4 கூகுள்’. இந்தியாவைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கான‘டூடுல் 4 கூகுள்’ போட்டியில் இந்தியாவின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில் அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் திவ்யான்ஷி சங்கல் என்ற 7 வயது சிறுமி ‘எதிர்காலத்தில் நகரும் மரங்கள்’ என்ற தலைப்பில் வரைந்த படங்கள் முதல் இடம் பிடித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X