என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சதாப்தி, துரந்தோ, ராஜதானி ரெயில்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு
Byமாலை மலர்15 Nov 2019 10:21 AM GMT (Updated: 15 Nov 2019 10:21 AM GMT)
அதிவேக ரெயில்களான சதாப்தி, துரந்தோ, ராஜதானி ரெயில்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு ரெயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் பயணிகள் வசதிக்காக அதிவேகமாக செல்லும் சதாப்தி, துரந்தோ, ராஜதானி என்ற சொகுசு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சாதாரண எக்ஸ்பிரஸ் ரெயில்களை விட மேற்கண்ட ரெயில்களில் பயணிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் இந்த ரெயில்களில் உணவுப் பொருட்களின் விலையும் மற்ற ரெயில்களை விட அதிகம்.
இந்நிலையில், சதாப்தி, துரந்தோ, ராஜதானி ரெயில்களில் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில், ஒரு டீ ரூ.35, (ரூ.6 உயர்வு) காலை சிற்றுண்டி ரூ.140 (ரூ.7 உயர்வு), மதிய உணவு மற்றும் இரவு உணவு ரூ.245 (ரூ.15 உயர்வு) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில், ஒரு டீ ரூ.20 (ரூ.5 உயர்வு), காலை சிற்றுண்டி ரூ.105 (ரூ.8 உயர்வு), மதிய உணவு மற்றும் இரவு உணவு ரூ.185 (ரூ.10 உயர்வு) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விலையேற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X