என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனுமீது டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு
Byமாலை மலர்14 Nov 2019 1:55 PM GMT (Updated: 14 Nov 2019 1:55 PM GMT)
அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், டெல்லி ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2007-ம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி நிதியை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதில் முறைகேடு நடந்ததாக கூறி சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு மே 15-ந் தேதி முதல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதேபோல சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் உள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை கடந்த 16-ம் தேதி கைது செய்திருந்தது. அவரை நீதிமன்ற காவலில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை முடித்த டெல்லி ஐகோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், டெல்லி ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது. நாளை ஜாமீன் கிடைத்தால் அவர் திகார் சிறையில் இருந்து வெளிவர வாய்ப்புள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X