search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேரு நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சோனியா காந்தி.
    X
    நேரு நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சோனியா காந்தி.

    இன்று 130வது பிறந்தநாள்- நேரு நினைவிடத்தில் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

    ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
    புதுடெல்லி:

    குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130-வது பிறந்தநாள் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

    டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

    நேரு நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரணாப் முகர்ஜி

    இதேபோல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

    ‘நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார். 

    நேரு நினைவு ஓட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள்

    டெல்லியில், குழந்தைகளுக்கான சிறப்பு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று உற்சாகமாக ஓடினர்.
    Next Story
    ×