என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று 130வது பிறந்தநாள்- நேரு நினைவிடத்தில் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
Byமாலை மலர்14 Nov 2019 4:49 AM GMT (Updated: 14 Nov 2019 4:49 AM GMT)
ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி:
குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130-வது பிறந்தநாள் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
‘நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.
டெல்லியில், குழந்தைகளுக்கான சிறப்பு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று உற்சாகமாக ஓடினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X