search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்கள் மோதி தடம்புரண்டு நிற்கும் காட்சி
    X
    ரெயில்கள் மோதி தடம்புரண்டு நிற்கும் காட்சி

    ஐதராபாத்தில் 2 ரெயில்கள் மோதல்- பலர் படுகாயம்

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இரண்டு ரெயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்தனர்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் காச்சிகுடா ரெயில் நிலையத்தில் இன்று எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின. இந்த சம்பவத்தில் பல பயணிகள் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதியதாகவும், சிக்னல் கோளாறால் இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ரெயில்கள் மோதி விபத்து

    ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக தண்டவாளத்தில் இருந்து உடைந்த பெட்டிகளை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் பல்வேறு ரெயில்களின் சேவை பாதிப்படைந்து உள்ளது.
    Next Story
    ×