என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவை இழிவுபடுத்தி விட்டு இம்ரான் கானை புகழ்வதா? - சித்துவுக்கு பா.ஜனதா கண்டனம்
Byமாலை மலர்11 Nov 2019 1:27 AM GMT (Updated: 11 Nov 2019 1:27 AM GMT)
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, பாகிஸ்தானையும், அதன் பிரதமர் இம்ரான் கானையும் புகழ்ந்து பேசியதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பஞ்சாப்பை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து, பாகிஸ்தானையும், அதன் பிரதமர் இம்ரான் கானையும் புகழ்ந்து பேசியுள்ளார். இம்ரான் கானை ‘ஷாஹென்ஷா‘ என்று கூறியுள்ளார்.
ஆனால், அதே சமயத்தில், கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து விட்டது, இந்தியர்களுக்கு பாகிஸ்தான் அளித்த சலுகை போன்றது என்றும் கூறியுள்ளார். இப்படி இந்தியாவை இழிவுபடுத்தி சித்து பேசியதற்காக சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
14 கோடி சீக்கியர்கள் சார்பில் பேச சித்துவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
இவ்வாறு அவர் கூறினார்.
அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து, காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான ‘நேஷனல் ஹெரால்டு‘வில் வெளியான கட்டுரைக்கு சம்பித் பத்ரா கண்டனம் தெரிவித்தார். அதில், இந்திய சுப்ரீம் கோர்ட்டையும், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டையும் ஒப்பிட்டு கருத்து கூறப்பட்டு இருந்தது.
இருப்பினும், அந்த கட்டுரையை ‘நேஷனல் ஹெரால்டு‘ தனது இணையதளத்தில் இருந்து நீக்கி விட்டது. அது, கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளது.
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பஞ்சாப்பை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து, பாகிஸ்தானையும், அதன் பிரதமர் இம்ரான் கானையும் புகழ்ந்து பேசியுள்ளார். இம்ரான் கானை ‘ஷாஹென்ஷா‘ என்று கூறியுள்ளார்.
ஆனால், அதே சமயத்தில், கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து விட்டது, இந்தியர்களுக்கு பாகிஸ்தான் அளித்த சலுகை போன்றது என்றும் கூறியுள்ளார். இப்படி இந்தியாவை இழிவுபடுத்தி சித்து பேசியதற்காக சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
14 கோடி சீக்கியர்கள் சார்பில் பேச சித்துவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
இவ்வாறு அவர் கூறினார்.
அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து, காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான ‘நேஷனல் ஹெரால்டு‘வில் வெளியான கட்டுரைக்கு சம்பித் பத்ரா கண்டனம் தெரிவித்தார். அதில், இந்திய சுப்ரீம் கோர்ட்டையும், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டையும் ஒப்பிட்டு கருத்து கூறப்பட்டு இருந்தது.
இருப்பினும், அந்த கட்டுரையை ‘நேஷனல் ஹெரால்டு‘ தனது இணையதளத்தில் இருந்து நீக்கி விட்டது. அது, கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X