search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலில் சேதமான வீடு
    X
    புயலில் சேதமான வீடு

    புல்புல் புயல் கரையை கடந்தது - 2 பேர் உயிரிழப்பு

    மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் தலா ஒருவர் புல்புல் புயலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
    கொல்கத்தா:

    வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது. ‘புல்புல்’ புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது.

    இந்த புயல், அந்தமான் அருகே 400 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர், கடந்த 8-ம் தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.  இதனால்  தொடர்ந்து மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.  இந்த புயல் காற்று மணிக்கு 155 கி.மீ. வரைக்கும் வேகமுடன் வீசியது.

    இதனால் கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதி சீற்றமுடன் காணப்படும். ன்றும் இதனை முன்னிட்டு வருகிற 11-ம் தி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது.

    மேற்கு வங்காளத்தின் கடலோர பகுதியில் நேற்று முழுவதும் மழை பெய்தது. மரங்கள் வேருடன் சாய்ந்தன. கொல்கத்தா நகரில் கிளப் ஒன்றில் இருந்த மரம் ஒன்று சாய்ந்ததில் ஒருவர் அதனடியில் சிக்கி உயிரிழந்தார்.

    இதேபோல், ஒடிசாவின் கேந்திரபாரா நகரில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.

    புல்புல் புயலால் கொல்கத்தா விமான நிலையம் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மூடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண் படையை சேர்ந்த 17 குழுவினர் மேற்கு வங்காளத்திலும், 6 குழுவினர் ஒடிசாவிலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×