என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தெலுங்கானாவில் பெண் தாசில்தாரை எரித்து கொன்ற விவசாயியும் பலி
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள அப்துல்லாபுர்மெட் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் தாசில்தாரராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி.
கடந்த 4-ந் தேதி அலுவலகத்தில் விஜயா ரெட்டி இருந்தபோது அவர் மீது விவசாயி சுரேஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.
இதில் விஜயா ரெட்டி தீயில் கருகி அலறி துடித்து பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற கார் டிரைவர் குருநாதம், மற்றொரு ஊழியரும் படுகாயம் அடைந்தனர்.
அதேபோல் தாசில்தாருக்கு தீவைத்த விவசாயி சுரேசும் படுகாயம் அடைந்தார். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விசாரணையில் சுரேஷின் நிலம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நிலத்தின் பட்டாவில் அவரது பெயர் இடம்பெற வேண்டும் என்று இதில் தாசில்தார் விஜயா ரெட்டி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் தாசில்தார் விஜயா ரெட்டி தாமதம் செய்ததால் ஆந்திரத்தில் சுரேஷ் தீவைத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தீக்காயம் அடைந்த தாசில்தாரின் டிரைவர் குருநாதம் கடந்த 5-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விவசாயி சுரேஷ்க்கு உஸ்மானியா அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சுரேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்