என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
34-வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு- தெலுங்கானா பஸ் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வருவதில் சிக்கல்
Byமாலை மலர்7 Nov 2019 9:43 AM GMT (Updated: 7 Nov 2019 9:43 AM GMT)
தெலுங்கானா மாநில பஸ் ஊழியர்களின் போராட்டம் 34-வது நாளாக நீடிக்கும் நிலையில், போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வருவதற்கான சூழல் இல்லை.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்துக் கழக்ததை அரசுடன் இணைக்க வேண்டும், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த மாதம் 5-ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
அரசு விதித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை தாங்களாகவே பதவி விலகியதாக அரசு எடுத்துக்கொள்ளும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்தார்.
எனினும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்காலிக ஊழியர்கள், மாற்று நபர்களை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 34-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. பணிமனை மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஸ்டிரைக் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளில் முரண்பாடு இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.
போராட்டத்தின் இடையே ஊழியர்கள் சிலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலமும் அரங்கேறி உள்ளது. இன்று ஐதராபாத்தில் ஒரு ஊழியர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கமும், போராட்டத்தை வழிநடத்தும் கூட்டு நடவடிக்கை குழுவும் தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் உடனடியாக முடிவுக்கு வருவதற்கான சூழல் இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X