search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியரை தாக்கும் மாணவர்கள்
    X
    ஆசிரியரை தாக்கும் மாணவர்கள்

    மாணவிகளிடம் அத்துமீறல்- கண்டித்த ஆசிரியரை கொடூரமாக தாக்கிய மாணவர்கள்

    உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்டார்.
    பிரயாக்ராஜ்:

    உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரின் பல்கரான்பூர் பகுதியில் உள்ள ஆதர்ஷ் ஜந்தா பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுகாதார முகாம் நடந்தது. 

    இதில் சில மாணவர்கள், மாணவிகள் சிலரிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. அவர்களை ஆசிரியர் ஒருவர் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பாதுகாவலர்களை அழைத்து கொண்டு சென்று ஆசிரியர் மீது தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

    உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கியதில் ஆசிரியர் தரையில் சுருண்டு விழுகிறார். அப்போதும் அந்த கும்பல் தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஆசிரியர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகினற்னர்.
    Next Story
    ×