என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காற்று மாசுபாடு ஓரளவு குறைந்தது- டெல்லியில் பள்ளிகள் திறப்பு
Byமாலை மலர்6 Nov 2019 4:21 AM GMT (Updated: 6 Nov 2019 4:21 AM GMT)
டெல்லியில் காற்று மாசுபாடு ஓரளவு குறைந்ததையடுத்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் பலர் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு சென்றனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு, அபாய அளவைத் தாண்டியதால் கடந்த 1-ம் தேதி மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனால் கனகர வாகனங்கள் மற்றும் அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
காற்று மாசினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டெல்லி, நொய்டா, காசியாபாத், பரிதாபாத் மற்றும் குர்கான் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக டெல்லியில் காற்றின் தரம் ஓரளவு சீரடைந்து, காற்றின் தர அளவு 400-ஐ விட குறைந்தது. இதனால் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
எனினும் காலையில் எதிரே வரும் நபர் தெரியாத அளவிற்கு பனிப்புகை சூழ்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. பனிப்புகை மற்றும் காற்று மாசில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மாணவர்கள் பலர் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு சென்றனர்.
டெல்லியின் லோதி பகுதியில் காற்று மாசு பிஎம் 2.5 அளவு 279 ஆகயவும், பிஎம் 10 அளவு 250 ஆகவும் இருந்தது. இது மோசமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X