search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளுநரை சந்தித்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத கட்சியினர்
    X
    ஆளுநரை சந்தித்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத கட்சியினர்

    மகாராஷ்டிரா ஆளுநருடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

    மகாராஷ்டிரா மாநில ஆளுநரை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இன்று சந்தித்தனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த ஒரு தனி கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்த போதும் சிவசேனா ஆட்சியில் சம பங்கு கேட்பதால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. 

    இதற்கிடையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணியமைத்து ஆட்சியை பிடிக்க ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை மும்பையில் உள்ள அவரது மாளிகையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்று சந்தித்தனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார்

    இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அஜித் பவார் கூறுயதாவது:-

    மகாராஷ்டிராவில் பெய்த பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிதி உதவிகள் சரிவர சேரவில்லை. ஆகையால் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க ஆளுநர் உதவி புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×