search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரந்தீப் சுர்ஜிவாலா
    X
    ரந்தீப் சுர்ஜிவாலா

    பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது - காங்கிரஸ்

    காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்பட பல முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ்-அப் தகவல்கள், இஸ்ரேல் நிறுவனத்தின் மூலம் உளவு பார்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இது, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து நவம்பர் 4-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி 'வாட்ஸ்-அப்' நிர்வாகத்துக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது.
     
    இந்நிலையில், பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது என தெரிவித்தார்.
    Next Story
    ×