என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் காற்று மாசால் புகைமூட்டம் - 32 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
Byமாலை மலர்3 Nov 2019 8:17 AM GMT (Updated: 3 Nov 2019 11:07 AM GMT)
காற்று மாசால் ஏற்பட்ட புகைமூட்டம் அளவுக்கதிகமாக இருந்ததால் டெல்லியில் இன்று தரையிறங்க வந்த 32 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
புதுடெல்லி:
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு அனுமதிக்க அளவைவிட பன்மடங்கு அதிகரித்ததால் ஒற்றைப்படை இரட்டைப்படை எண்ணுள்ள வாகன போக்குவரத்து முறை கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால் ஓரளவுக்கு மாசுபாடு குறைந்தாலும் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சூழ்ந்த கரியமலம் கலந்த புகையினால் சிலநாட்களாக மீண்டும் காற்று மாசு அபாயகரமான உச்சக்கட்ட நிலையை எட்டியது.
இந்த காற்று மாசினால் சிறார்கள் பாதிக்கப்படாமல் இருக்க நவம்பர் 5ம் தேதி வரை அரசு பள்ளிகள், அரசின் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று நிலைமை மேலும் மோசமாகி டெல்லியை சுற்றிலும் கடுமையான புகைமூட்டமாக காணப்பட்டது. பொழுது விடிந்து, காலை 10 மணி வரையிலும் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை பயன்படுத்தி மெதுவாக ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.
டெல்லி விமான நிலையம் பகுதியிலும் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், அங்கு தரையிறங்க வந்த 32 விமானங்கள் லக்னோ, அம்ரிஸ்டர், ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு அனுமதிக்க அளவைவிட பன்மடங்கு அதிகரித்ததால் ஒற்றைப்படை இரட்டைப்படை எண்ணுள்ள வாகன போக்குவரத்து முறை கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால் ஓரளவுக்கு மாசுபாடு குறைந்தாலும் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சூழ்ந்த கரியமலம் கலந்த புகையினால் சிலநாட்களாக மீண்டும் காற்று மாசு அபாயகரமான உச்சக்கட்ட நிலையை எட்டியது.
அருகாமையில் உள்ள அரியானா, பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் நெல் மற்றும் கோதுமை பயிர்களின் அறுவடை முடிந்து ஏராளமான வைக்கோல் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மூட்டத்தின் எதிரொலியாக தற்போது டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்து சுவாசிக்க தகுதியற்ற அபாயகரமான அளவை எட்டியுள்ளது.
இந்த காற்று மாசினால் சிறார்கள் பாதிக்கப்படாமல் இருக்க நவம்பர் 5ம் தேதி வரை அரசு பள்ளிகள், அரசின் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று நிலைமை மேலும் மோசமாகி டெல்லியை சுற்றிலும் கடுமையான புகைமூட்டமாக காணப்பட்டது. பொழுது விடிந்து, காலை 10 மணி வரையிலும் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை பயன்படுத்தி மெதுவாக ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.
டெல்லி விமான நிலையம் பகுதியிலும் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், அங்கு தரையிறங்க வந்த 32 விமானங்கள் லக்னோ, அம்ரிஸ்டர், ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X