search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது நடவடிக்கை
    X
    கைது நடவடிக்கை

    ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது

    ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், சோபூர் பகுதியில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து இன்று காலை அங்கு சென்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த தேடுதல் வேட்டையின்போது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தனிஷ் அகமது சன்னா என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் உயர்  போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநராக பதவியேற்ற கிரிஷ் சந்திர முர்மு, இன்று பாரமுல்லா மாவட்டத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×