என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.95,380 கோடி- செப்டம்பர் மாதத்தை விட அதிகம்
Byமாலை மலர்1 Nov 2019 10:36 AM GMT (Updated: 1 Nov 2019 10:36 AM GMT)
நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.95,380 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தைவிட அதிகம் வசூலாகி உள்ளது.
புதுடெல்லி:
அக்டோபர் மாதம் வசூலான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான தகவலை மத்திய நிதித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் மொத்தம் 95,380 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.17,582 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.23,674 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.46,517 கோடி (இறக்குமதி வரி ரூ.21446 கோடி உள்பட) ஆகும்.
செஸ் எனப்படும் கூடுதல் வரி ரூ.7,607 கோடி வசூலாகி உள்ளது. இதில், இறக்குமதி மீதான ரூ.774 கோடி வரியும் அடங்கும். மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் ரூ.2536 கோடி அதிகம் ஆகும்.
செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை மொத்தம் 73.83 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன் தாக்கல் செய்துள்ளதாகவும் நிதித்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X