என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆனது - மம்தா நிதியுதவி அறிவிப்பு
Byமாலை மலர்30 Oct 2019 10:38 AM GMT (Updated: 30 Oct 2019 10:38 AM GMT)
ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆனது. பலியான தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மம்தா பானர்ஜி தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் மாவட்டத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மூர்ஷிதாபாத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான தொழிலாளர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயங்கரவாத தாக்குதலில் பலியானதை அறிந்த அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும், பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X