என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இப்படியும் ஒரு மந்திரி: ஏழை குழந்தைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் தீபாவளி விருந்து
Byமாலை மலர்28 Oct 2019 9:14 AM GMT (Updated: 28 Oct 2019 9:14 AM GMT)
மத்திய பிரதேசத்தில் ஒரு மந்திரி தீபாவளியையொட்டி ஏழைக்குழந்தைகளுக்கு 5 நட்சத்திர ஓட்டலில் விருந்து அளித்து உபசரித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
போபால்:
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் அம்மாநில உயர்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரத்திற்கான மந்திரியுமான ஜிதேந்திர பட்வாரி ஏழை குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடியுள்ளர்.
அவர் அம்மாநிலத்தில் உள்ள ஏழை குழந்தைகள் சிலருக்கு இந்தூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்தார். மந்திரி ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தங்கள் தீபாவளியை கொண்டாடினர்.
நவீன அரசியலில் ஏழைகள் அரசியல்வாதிகளை சந்திப்பது எட்டாக்கனியாக இருக்கும் நிலையில் மந்திரி ஒருவர் ஏழை குழந்தைகளை அழைத்து 5 நட்சத்திர ஓட்டலில் உணவு வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X