என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுர்ஜித் உயிருடன் மீட்டு பெற்றொரிடம் சேர்க்கப்படுவான்- ராகுல் காந்தி நம்பிக்கை
Byமாலை மலர்27 Oct 2019 10:44 AM GMT (Updated: 27 Oct 2019 10:44 AM GMT)
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் சுர்ஜித்தின் உயிருக்கும் நேரத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் போராட்டத்தை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி குழுந்தை உயிருடன் மீட்கப்படுவான் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
அவனை மீட்கும் பணிகள் சுமார் 50 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது.
இன்று காலை 10 மணி நிலவரப்படி சுமார் 30 அடி வரை குழி தோண்டப்பட்டது. சுமார் 35 அடி தோண்டிய பின்னர் இடையில் பாறை குறுக்கீட்டதால் இந்த முயற்சியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
பாறையை குடையும் சக்தி வாய்ந்த இயந்திரத்தின் மூலம் தோண்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக கரூரில் இருந்து 98 அடி ஆழம் வரை துளையிடும் சக்தி வாய்ந்த வாகனம் 3 மணியளவில் வந்து சேர்ந்தது.
அந்த இடத்தின் மண்ணை பரிசோதித்தப்பின் இந்த இயந்திரம் தொடர்ந்து துளையிடும் பணியை மேற்கொள்ள உள்ள நிலையில் 3.30 மணியில் இருந்து இப்பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.
மீட்பு பணி தொடங்கி சுமார் 50 மணி நேரம் ஆகும் நிலையில் சுர்ஜித் விரைவாகவும், பாதுகாப்பாகவும் உயிருடன் மீட்கப்பட வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்வதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
While the nation celebrates Deepavali, in Tamil Nadu a race against time is underway to save baby Surjeeth, who has been trapped in a borewell since Friday. I pray that he will be rescued & reunited with his distraught parents at the earliest 🙏#savesurjeeth
— Rahul Gandhi (@RahulGandhi) October 27, 2019
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் சுர்ஜித்தின் உயிருக்கும் நேரத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் போராட்டத்தை சுட்டிக்காட்டியுள்ளார். சுர்ஜித் மீட்கப்பட்டு அவனது பெற்றோரிடம் சேர்க்கப்படுட வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X