என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுட்டுக்கொல்லப்பட்ட கம்லேஷ் திவாரியின் மனைவி இந்து சமாஜ் கட்சியின் தலைவரானார்.
Byமாலை மலர்26 Oct 2019 10:39 AM GMT (Updated: 26 Oct 2019 10:39 AM GMT)
சுட்டுக்கொல்லப்பட்ட கம்லேஷ் திவாரியின் மனைவி கிரண் திவாரி இந்து சமாஜ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி (45). இதற்கு முன்பு இவர் இந்து மகாசபையில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.
இதற்கிடையே, லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள கம்லேஷ் திவாரியின் வீட்டிற்குள் கடந்த 18-ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் கம்லேஷ் திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கம்லேஷ் திவாரியின் குடும்பத்திற்கும் ஒரு வீடும் ரூ. 15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், இந்த கொலை தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்து சமாஜ் கட்சியின் தலைவராக கம்லேஷ் திவாரியின் மனைவி கிரண் திவாரி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X