search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    ஜி.எஸ்.டி. எளிமையாக்கப்பட்டதால் இந்தியா முன்னேற்றம்: நிர்மலா சீதாராமன்

    ஜி.எஸ்.டி. எளிமையாக்கப்பட்டதால் எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தை பிடித்துள்ளது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
    புதுடெல்லி :

    உலக வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து எளிதாக வர்த்தகம் செய்வது உள்பட பல்வேறு பிரிவுகளில் உலக நாடுகளை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடுகிறது. இதில் எளிதாக வர்த்தகம் செய்வது பிரிவில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தை பிடித்தது.

    இதில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் சிங்கப்பூர், ஹாங்காங், டென்மார்க், கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பட்டியல் குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) எளிமையாக்கியதன் மூலம் எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. திவால் குறியீடு அமல்படுத்தப்படுவதும் எளிதான வர்த்தகம் பட்டியலில் இந்தியாவை முன்னேற்ற உதவியது. ஜி.எஸ்.டி. மேலும் எளிமையாக்கப்படும். ஆன்லைன் கணக்கு தாக்கலில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஜிஎஸ்டி

    இந்த பட்டியல் தற்போது மும்பை, டெல்லியை மட்டும் கணக்கில் கொண்டு எடுக்கப்படுகிறது. இதில் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவை சேர்க்க வேண்டும் என்று கூறியதை உலக வங்கி ஏற்றுக் கொண்டது. இப்போதைக்கு எங்களது நோக்கம் இந்த பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா இடம்பெற வேண்டும் என்பதே.

    முன்னேறிவரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து 3-வது ஆண்டாக முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இது மிகப்பெரிய முன்னேற்றம். வர்த்தகம் தொடங்குவதில் நாம் ஒரு இடம் மட்டுமே முன்னேறி உள்ளோம்.

    எளிதான வர்த்தகம் பட்டியலில் இந்தியா முன்னேற மாநில அரசுகளும் வர்த்தக சூழ்நிலையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். குறிப்பாக நிலம், வீடு போன்ற சொத்துகள் பத்திரப்பதிவை அதிகரிக்க வேண்டும். திவால் பிரச்சினைக்கு தீர்வு, கட்டுமான அனுமதி, எல்லை தாண்டிய வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×