search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்த காட்சி
    X
    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்த காட்சி

    பகுஜன் சமாஜ் தலைவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்த 7 பேர் கைது

    ராஜஸ்தான் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர் சீதாராம், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கவுதம் ஆகியோரை ஜெய்ப்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் சமீபத்தில் கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.

    அவர்களது முகத்தில் கருப்பு மை பூசினர். செருப்பு மாலை அணிவித்தனர். ராம்ஜி கவுதமை ஒரு கழுதை மீது ஏற்றியும், சீதாராமை நடத்தியும் கட்சி அலுவலகத்துக்கு வெளியே ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பணம் வாங்கிக்கொண்டு தேர்தல் டிக்கெட் வினியோகித்ததாக குற்றம் சாட்டி, இந்த செயலில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சம்ரட்சிங், சிந்தி கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×