search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லை கண்காணிப்பில் இந்திய வீரர்
    X
    எல்லை கண்காணிப்பில் இந்திய வீரர்

    பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

    காஷ்மீரில் உள்ள பூஞ்ச் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் படையினர் இன்று மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
    ஜம்மு:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

    இந்த ஆண்டிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதுவரை 2050-க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் நமது தரப்பில் சுமார் 25பேர் உயிரிழந்துள்ளனர்.

    மோர்ட்டார் கவன்களுடன் பாகிஸ்தான் வீரர்

    பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் அப்பகுதியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் பலியாகினர். மேலும், பயங்கரவாதிகளின் முகாம்களை பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி அழித்தது.

    இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்துக்குட்பட்ட கஸ்பா மற்றும் கிர்னி எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் இன்று  மாலை சுமார் 4 மணியில் இருந்து மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும்  தாக்குதல் நடத்தினர்.

    இந்திய வீரர்களும் இந்த தாக்குதலுக்கு உரிய முறையில் பதிலடி கொடுத்து வருவதாக ஜம்முவில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×