என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை நிறுத்திய பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி கண்டனம்
Byமாலை மலர்21 Oct 2019 10:31 AM GMT (Updated: 21 Oct 2019 10:31 AM GMT)
இந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை தன்னிச்சையாக நிறுத்திய பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியா பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. போர் நெறிமுறைகளை மீறி பாகிஸ்தான், எல்லைப்பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை தன்னிச்சையாக நிறுத்தியுள்ள பாகிஸ்தான் அரசின் செயலுக்கு மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் இதுகுறித்து தெரிவிக்கையில், ‘‘எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பாகிஸ்தான், தபால் துறையின் கடிதங்களை இந்தியாவுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டது. பாகிஸ்தானின் இந்த முடிவு சர்வதேச அஞ்சல் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X