search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    நன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா? - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்

    சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளதால் அவர் விரைவில் விடுதலை ஆவார் என்னும் தகவல்கள் தகர்ந்துப் போனது.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில்  அடைக்கப்பட்ட சசிகலா, நன்னடத்தை விதிகளின்கீழ் விரைவில் விடுதலை செய்யப்பட இருப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின.

     கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரிக்

    இந்த நிலையில்,  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள்  பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் விளக்கம் அளித்துள்ளார்.  தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா  விடுதலை ஆவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×